பயிர் பாதுகாப்பு :: கேழ்வரகு பயிரைத் தாக்கும் நோய்கள்

பிளாஸ்ட் : கதிர் கழுத்து கருகல்
தேமல் நோய் : போட்டி வைரஸ்

1.பிளாஸ்ட்

அறிகுறிகள்

  1. நோயின் தீவிர தாக்கத்தில் பயிர் காய்ந்தது அல்லது எரிந்தது போல் தோற்றமளிக்கும், அதனால் இப்பெயர்(பிளாஸ்ட்) பெற்றது.
  2. பூட்டை வெளிவந்த பின்பு இந்நோய் ஏற்பட்டால் பயிர் குட்டையாக வளரும்.
  3. பூட்டையின் கழுத்துப்பகுதியில் கருப்பு நிறமுடைய புள்ளிகள் தோன்றி உதிர்ந்து விடும் அல்லது பகுதி மட்டுமே பூட்டைப் பிடிக்கும், கழுத்துப் பகுதியில் பிளவு ஏற்பட்டு பூட்டை ஒடித்திவிடும்.
  4. கணு கருகல் : கணுப் பகுதியில் கருப்பாகி ஒடிந்துவிடும்.

கட்டுப்பாடு

  • விதையை கேப்டான் / திரம் 4 கிராம் / கிலோ அல்லது கார்பன்டாசிம் 2 கிராம் / கிலோ என்ற அளவில் நேர்த்தி செய்யலாம்.
  • டிரைசைக்லசோல் 500 கிராம் அல்லது எடிபென்பாஸ் 500 மில்லி அல்லது கார்பன்டாசிம் 250 கிராம் / எக்டர் என்ற அளவில் தெளிக்கலாம்.

மேலே

2.தேமல் நோய் : போட்டி வைரஸ்
கீற்று தேமல் நோய் : நியூக்கிளியோரேப்டோவைரஸ்
நோய் பரப்பும் கிருமி : சிகாமுலினா பைபங்டெல்லா சி.சினைய்

அறிகுறிகள்

  • கீற்று தேமல் நோயில் முதலில் அறிகுறியானது விதைத்த 45 நாள் கழித்து புனல் இலைகளில் சிறிய வெளிர் நிறமுடைய புள்ளிகளாகத் தோன்றும்.
  • பின்பு இப்புள்ளிகள் சேர்ந்து சிறிய கீற்றுகளாகத் தோன்றும்.
  • தீவிர நோய் தாக்கத்தில் பயிர் மஞ்சளாக மாறும்.
  • நோய் தாக்கிய பயிர் கணுப்பகுதியில் கிளைகளைத் தோற்றவித்து, தூர்களில் கதிரின்றி காணப்படும்.
  • இந்நோயினால் பாதிக்கப்பட்ட பயிரில் கதிர் வெளிவராமலும், அப்படியே கதிரை தோற்றுவித்தால் அவை உமியாகவும் காணப்படும்.

கட்டுப்பாடு
  • ஊடுருவிப் பாயும் பூச்சிக்கொலிலியான மீதைல் டெமட்டான் அல்லது மோனோகுரோட்டாபாஸ் 500 மில்லி / எக்டர் தெளிக்கலாம்.
  • இம்மருந்தை அறிகுறி தெரிந்தவுடனும் தேவைப்பட்டால் 20 நாட்களுக்கு ஒரு முறையும் தெளிக்கலாம்.

மேலே

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2014